'அம்மா' விடுதலைக்கு பிறகும் அசையாத அரசு இயந்திரம்.. காரணம் ஆர்.கே.நகர் தேர்தல்!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பணியில் மூழ்கியுள்ளதால், அமைச்சர்கள் யாரும் வருகை தராமல், தலைமைச் செயலகம், வெறிச்சோடி காணப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர், 27ம் தேதி, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. ஆனாலும், சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபடாமல், ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் நிறைவேற்ற வழிபாட்டு தலங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான அமைச்சர்கள்.

கடந்த மாதம், 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். எனவே, மீண்டும் அமைச்சர்கள் தவறாமல், தலைமைச் செயலகம் வருவார்கள், முடங்கியிருந்த அரசு இயந்திரம் சுழலும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., சார்பில் அத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தேர்தல் பொறுப்பாளர்களாக, அனைத்து அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்டு, தேர்தல் 'பணியாற்றி' வருகின்றனர். இதனால், யாரும் தலைமைச் செயலகம் வருவதில்லை. அவர்கள் வராததால் அதிகாரிகளும் சிரத்தையுடன் வேலை பார்ப்பதில்லை. பொதுமக்களும் வருவதில்லை என்பதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications