போலீஸ் தடியடியால் கேள்விக்குறியான டிடிஆரின் எதிர்காலம்.. நீச்சல் வாழ்க்கையும் முடிந்ததாக கண்ணீர்
சென்னை மெரினா பகுதியில் தடியடி நடத்திய காவல்துறையினர் பணி முடித்து திரும்பிய ரயில்வே டிடிஆரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மெரினாவில் கடந்த 23ஆம் தேதி போலீசார் வீடுபுகுந்து நடத்திய தடியடி தாக்குதலில் ரயில்வே டிடிஆர் ஒருவரின் கை எலும்பு முறிந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்காத தன்னை போலீசார் கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழிப் போராட்டம் நடத்தியவர்களை கடந்த 23 ஆம் தேதி காலை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.
போலீசாரும் பதிலுக்கு கற்களை வீசினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் சென்னை நடுக்குப்பம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வாகனங்கள் மற்றும் குடிசைகள் தீக்கிரையாயின.

சிக்கிய ரயில்வே டிடிஆர்
காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறையின் போது திருவல்லிக்கேணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து கைது செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த ரயில்வே டிடிஆர் பிரேம்நாத்தையும் போலீசார் தாக்கியுள்ளனர்.

கை எலும்பு முறிந்தது
அவரும் அவரது பெற்றோரும் எத்தனையோ முறை போராட்டத்தில் பங்கேற்வில்லை, பணிமுடிந்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என்று கூறியும் அதனை அறவே கேட்காத காவல்துறையினர் அவரை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை எலும்பு முறிந்தது.

முறிந்துப்போன நீச்சல் வாழ்க்கை
மூன்று நாட்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். கை எலும்பு முறிந்துள்ளதால் பழையபடி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

என்ன நடவடிக்கை எடுக்குமோ?
மேலும் தன்மீது வன்முறை வழக்குப் பதியப்பட்டதால் ரயில்வே நிர்வாகம் தன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமோ? தனது எதிர்காலம் என்னவாகுமோ என பீதியடைந்துள்ளார்.
ஜெயலலிதாவிடம் பரிசு வாங்கியவர்
பாதிக்கப்பட்ட ரயில்வே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையால் பரிசுகளை பெற்றுள்ளார். ஏராளமான பதக்கங்களையும் குவித்து வைத்துள்ளார். காவல்துறை தனது கையை மட்டும் முறிக்கவில்லை. தனது எதிர்காலத்தையும் சிதைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications