சென்னையில் காலை முதல் சாரல் மழை.. குளுகுளு வானிலையால் மக்கள் குஷி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை, இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக உள்ளது. சாரல் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறைக்காற்றும் வீசியுள்ளது.

மழை காரமமாக குளுமையான வானிலை நிலவுவதால் செனந்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications