கண்ணா பத்தே நிமிஷம்தான்... போயஸ் கார்டனில் ரஜினி பேட்டி!
Subscribe to Oneindia Tamil
சென்னை : போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். தனது அரசியல் நிபைப்பாடு குறித்து 10 நிமிடத்தில் தெரியும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிடவும் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் புறப்பட்டார். போயஸ் கார்டன் முகப்பு வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கட்சி அறிவிப்பா, பேரவை அறிவிப்பா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தனது ஸ்டைலில் கண்ணா 10 நிமிடத்தில் தெரிந்துவிடும் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு புறப்பட்டார் ரஜினி.












Click it and Unblock the Notifications