போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி!
நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது போன உயிரை சிங்கப்பூரில் இருந்து ரசிகர்கள் தான் மீட்டெடுத்து வந்தார்கள், உங்களுடைய அன்பு என்ன செய்தும் ஈடு செய்ய முடியாது என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் உர
Recommended Video

சென்னை : உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது எனக்காக பலர் மண்சோறு சாப்பிட்டு, கடவுளிடம் வேண்டி சிங்கப்பூரில் இருந்து என்னுடைய உயிரை மீட்டு வந்தது ரசிகர்களின் அன்பு தான். இன்று ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை நினைக்கும் போது எனக்கு கண்கலங்குகிறது என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.
ரசிகர்கள் மத்தியில் 5வது நாளாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களின் அன்பு பற்றி மிகவும் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது, நான் உடல்நிலை சரியில்லாத போது போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தேன். நான் கொண்டு வந்தேன் என்று சொல்வதை விட ரசிகர்கள் கொண்டு வந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ரசிகர்கள் விதவிதமான பிரார்த்தனைகளை செய்தனர். எனக்காக மண்சோறு சாப்பிட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர். இதையெல்லாம் பார்த்த போது நான் என்ன செய்தேன், என்று மிகவும் பிரமிப்பாக இருந்தது.

ரசிகர்களின் ஈடில்லாத அன்பு
ரசிகர்கள் என் மீது அவ்வளவு அன்பை ஏன் பொழிகிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. எனக்கு அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி இருந்தார், அதை இப்போது நினைத்தால் கூட எனக்கு கண்களில் தண்ணீர் வருகிறது.

கடிதத்தை நினைவுபடுத்தி கண்கலங்கிய ரஜினி
தலைவா, நீ உயிருடன் வந்து நடித்து என்னை மகிழ்விக்கவும் வேண்டாம், அரசியலுக்கு வந்து என்னை காப்பாற்றவும் வேண்டாம். நீ உயிருடன் வந்தாலே போதும் என்று அந்த ரசிகர் எழுதி இருந்தார்.

ஆண்டவன் அனைத்தையும் காட்டிவிட்டான்
இதெல்லாம் நீங்கள் கொடுத்த அன்பு, ஆசிர்வாதம் என்று தான் பார்க்கிறேன். ஆண்டவன் உங்களுக்குள் தான் இருக்கிறான், இந்தப் பயணத்தில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால். கீழ் இருந்து மேல் வரை அனைத்தையும் ஆண்டவன் காட்டிவிட்டான்.

நிஜத்தில் கிடைக்காது கனவின் சந்தோஷம்
பணம், பெயர், புகழ் என அனைத்தையும் ஆண்டவன் எனக்கு காட்டிவிட்டான். என்னுடைய அனுபவம் என்னவென்றால் கனவில் இருக்கும் சந்தோஷம் நினைவில் இருக்காது. பணம், பெயர், புகழ் காதலும் கூட நினைவாகும் போது சந்தோஷம் இருக்காது.

நியாயமான வழியில் அடையுங்கள்
அதற்காக கனவு காணக் கூடாது என்று சொல்லவில்லை, கனவு காண வேண்டும், அந்த கனவை நியாயமான, தர்மமான முறையில் அடைய நினைக்க வேண்டும். அநியாயமான வழியில் கனவை அடைய நினைத்தால் நிம்மதியும் இருக்காது, கொஞ்ச நாளில் அது மக்களுக்கு தெரிந்து விடும். மதிப்பு, மரியாதை என அனைத்தும் போய்விடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications