வடை போச்சே... பெரியார் சிலை விவகாரத்தில் காணாமல் போனதே நம்ம பேச்சு... அதிர்ச்சியில் ரஜினி
தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் தமது அரசியல் பேச்சு எடுபடாமல் போனதில் ரொம்பவே அதிர்ந்துள்ளதாம் ரஜினி தரப்பு.
Recommended Video

சென்னை: தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் தம்முடைய அரசியல் பேச்சு எடுபடாமல் போனதால் ரஜினிகாந்த் தரப்பு ரொம்பவே அதிர்ந்து போயுள்ளதாம்.
மதுரவாயிலில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ' இந்தியாவில் மிகப் பெரிய எழுத்தாளர், பேச்சாளரான கருணாநிதியையே 13 ஆண்டுகாலம் ஒதுக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். நல்லாட்சியைத் தந்தவர் அவர். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை என்னால் நிரப்ப முடியும்' எனப் பேசினார்.

எம்ஜிஆர் குறித்து திடீர் பேச்சு
இதற்குப் பதில் அளித்த தினகரன், அரசியலில் நீடிக்கவே எம்.ஜி.ஆர். பற்றி ரஜினி பேசி வருகிறார். ரஜினிகாந்த் கூறியுள்ள வெற்றிடத்தை தேர்தலுக்கு பின்னர் மக்கள் நிரப்புவார்கள். 1975-க்கு பிறகு எம்.ஜி.ஆர். பற்றி பேசாத ரஜினிகாந்த், 33 ஆண்டுக்கு பிறகு இப்போது பேசி வருகிறார்' எனக் குறிப்பிட்டார்.

ரஜினியின் ஆலோசனை
கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துப் பேசி வந்தார் ரஜினி. அப்போதெல்லாம் மிகப் பெரிய எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் பயணம் குறித்து, மூத்த அரசியல் பிரமுகர்களின் ஆலோசனைகளையும் கேட்டுப் பெற்றார் ரஜினி.

கமலும் ரஜினியும்
முரசொலி பவள விழாவில், 'தற்காப்பைவிட தன்மானமே முக்கியம்' என ரஜினியை வைத்துக் கொண்டு விமர்சித்தார் கமல். இதற்கு, சிவாஜி மணிமண்டப விழாவில் பதிலடி கொடுத்தார் ரஜினி.

விவாதப் பொருளான ரஜினி பேச்சு
இதன்பிறகு, அவருடைய அரசியல் வருகை குறித்து பலவித விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் கிளப்பப்பட்டு வந்தன. இதற்கெல்லாம், எந்தவித பதிலையும் ரஜினி தரவில்லை. ஆனால் மதுரவாயிலில் ரஜினி பேசிய பேச்சு விவதாப் பொருளானது. எந்தவிதக் குறிப்பும் இல்லாமல், ரஜினி பேசிய எதார்த்த பேச்சாக பார்க்கப்பட்டது.

பெரியார் சிலை விவகாரம்
அந்த நேரத்தில், தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா போட்ட பதிவு, ரஜினி பேச்சை காணாமல் போக செய்துவிட்டது. அரசியல் கட்சிகள் பலவும் பெரியார் விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடவில்லை. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் பா.ஜ.கவை விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ஆஹா ரொம்பவே பின் தங்கிவிட்டோமே என தாமதமாக உணர்ந்துதான், 'பெரியார் சிலையை உடைப்பது காட்டுமிராண்டித்தனமானது' என காட்டமாக கூறினாராம் ரஜினி.
ஆஹா வடை போச்சே!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications