ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்.. யாருடனும் சேர மாட்டார்.. அர்ஜுன் சம்பத் திட்டவட்டம்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார். யாருடனும் சேர மாட்டார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் சென்றார். அங்கு அவர் ரஜினியுடன் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், வெளியே வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

விரைவில் அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்பது என் கணிப்பு. அதற்கான முழு தயாரிப்புகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். அரசியலுக்கு அவர் வருவது குறித்து அதிகார பூர்வமாக விரைவில் அறிவிப்பார்.

இந்து மக்கள் கட்சி ஆதரவு
நாங்கள் ரஜினியை சந்தித்து எங்களது வேண்டுகோளை வைத்துள்ளோம். அவர் அரசியலுக்கு வந்தால் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம். கழகங்கள் இல்லா தமிழகத்தை கொண்டு வருவோம்.

தமிழகத்திற்காக குரல் கொடுத்தவர்
தமிழக நலன்களுக்காக எந்தெந்த நேரத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்தந்த நேரத்தில் எல்லாம் ரஜினி குரல் கொடுத்துள்ளார். 1996ல் ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற கருத்தை தெரிவித்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார்.

தனிக்கட்சிதான் தொடங்குவார்
நிச்சயமாக அரசியலுக்கு அவர் வர வேண்டிய தருணம் இது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார். அவர் தனிக்கட்சி தொடங்கினால்தான் நல்லது செய்ய முடியும். இன்னொருவரின் தலைமையின் கீழ் இருந்து அவரது கனவுத் திட்டமான நதி நீர் இணைப்பை செய்ய முடியாது என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications