ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தாயாரை சந்திக்க கோரும் முருகனின் கோரிக்கை மனு ஹைகோர்ட்டில் நிராகரிப்பு!
ராஜீவ் கொலையில் தொடர்புடைய முருகன் சிறை அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பார்வையாளர்களை சந்திக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனது தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீஹரன் என்னும் முருகன் 26 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ளார். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முருகனின் அறையில் இருந்து 2 செல்போன்கள்,சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகனை அவரது மனைவியும் ஆயுள் தண்டனைக் கைதியுமான நளினி உள்ளிட்ட பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.

மகனை சந்திக்க முடியவில்லை
3 மாதங்களுக்கு இந்தத் தடை நீடிக்கும் என்று ஜெயில் நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இலங்கையில் இருந்து முருகனை சந்திக்க வந்த அவரது தயார் சோமணிக்கு முருகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

கோர்ட்டில் உருக்கம்
இந்நிலையில் கடந்த 5ம் தேதி சாமியார் தோற்றத்தில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார் முருகன். அப்போது தாயார் சோமணி போலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் தனது மகனின் கைகளை பிடித்து முத்தமிட்டார்.

அனுமதி கோரி மனு
இந்நிலையில் மே 29ம் தேதி முருகனின் தாயார் இலங்கை செல்ல வேண்டியுள்ளதால் அதற்குள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சிறை விதிகளுக்கு புறம்பாக முருகன் தனது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்ததாகவும் அவரின் அறையில் இருந்து 2 செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் மே 27ம் தேதிக்குள் தாயார் சோமணி முருகனை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முருகன் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற கோடைகால நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் முருகனை சந்திப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications