"இணைந்த" தாமரையும் இரட்டை இலையும்... இது புதுஸ்ஸா இருக்கே!
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஒரு கோலத்தில் தாமரை இலையும் அதில் அதன் இலைகளுக்கு பதிலாக இரட்டை இலை போடப்பட்டிருந்தது.
கோவை: கோவை மாவட்டதில் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கலந்து கொண்ட கோலப் போட்டியில் தாமரை பூவுக்கு இரட்டை இலை சின்னம் இலையாக வரையப்பட்டிருந்ததால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு இசைவு கொடுத்தது.
இணைந்த தாமரை - இரட்டை இலை
— Manoj Prabakar S (@imanojprabakar) November 5, 2017
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ பங்கேற்ற கோலப்போட்டியில் புதுவகை கோலம் pic.twitter.com/AZ5Gf54vP6
இந்நிலையில் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் இன்று சூலூரில் கோல போட்டியை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த ஒரு கோலம் அவரது மனதை கவர்ந்தது. அதாவது தாமரை பூவுக்கு இலையாக இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. இந்த படம் தற்போது வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications