'மது'வை ஓவர்டேக் செய்யும் மருது'.. ஆர்கே நகர் களத்தில் ஒன் இந்தியா...!
நேற்றைய சர்வே தொடர்ச்சி....
தொகுதியின் செரியன் நகர், ஜீவா நகர் பகுதிகளிலும் வலம் வந்தோம்.
ராஜன் பாபு: இங்கே அதிமுகவுக்கு தான் ஓட்டு அதிகம். ஆனா இந்த முறை திமுக வரும். ஓட்டு பிரியறது அவங்களுக்கு சாதகமா போகும்.
முருகேஷ்: திமுகல திரும்ப சிம்லாவுக்கே சீட்டு கொடுக்கலாம். அவர் ஜெயலலிதாகிட்ட தோத்தாலும் கூட தொகுதிக்கு ஏதாவது செஞ்சுட்டு தான் இருக்கார். இப்ப கூட ஒரு மருத்துவ முகாம் நடத்துனாரு. இருந்தாலும் டிஎம்கேவுக்கு தான் என் ஓட்டு.
பாலகிருஷ்ணன்: தீபாவுக்கு டெபாசிட் கிடைக்கும். சசிகலாவுக்கு அதுகூட கிடைக்காது பாருங்க...
தியாகராஜன்: லேடீஸ் ஓட்டு வாங்குறது தான் ஓபிஎஸ்சுக்கு இருக்கற சவால். அதுல ஜெயிச்சா ஜெயிச்ச மாதிரி.
மகேஷ்: திமுக ஜெயிக்கும். ஓபிஎஸ்சுக்கு இரண்டாவது கிடைக்கும்.
மகேந்திரபாபு: என் ஓட்டு ஓபிஎஸ்சுக்கு தான். வீட்டுல மனைவி தீபாவுக்கு தான் போடுவேன்னுட்டாங்க...
ஆனந்த்: இங்கே இருக்கற பிரச்னைகளை ஃபர்ஸ்ட் சரி பண்ணிட்டு அப்புறம் ஓட்டு கேட்க வரச் சொல்லுங்க.
கலையரசன்: திமுகவுக்கு தாங்க என் ஓட்டு.
கணேசன்: சதிகாரிகளுக்கு எப்படிங்க ஓட்டு போட முடியும்? ஓபிஎஸ்சுக்கு தான்.
ஆனந்த்பாபு: தீபாவுக்கு. அவங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போமே...