For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபல ரவுடி சிடி மணி கைது.. தனிப்படை போலீஸ் நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.

பிரபல ரவுடி சிடி மணி கைது செய்வதற்காக, சென்னை போலீஸ் கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை குழுவை அமைத்து இருந்தது. கடந்த சில மாதங்களாக போலீஸ் இவனை தேடி வந்தது. கடந்த மே 6ம் தேதியில் இருந்து போலீஸ் இவனை தேடி வந்தது.

Rowdy CT Mani arrested by a special unit of Chennai Police in Kanchipuram

சிடி மணி மீது மொத்தம் 8 கொலை வழக்குகள், சில பண மோசடி வழக்கு, சில மிரட்டல் வழக்குகள் இருக்கிறது. ஏற்கனவே சிடி மணியை போலீஸ் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.

கடைசியாக ஜெகா என்ற நில ஒப்பந்தாரர் வீட்டில் மணியின் ஆட்கள் பெட்ரோல் கொண்டு வீசி இருக்கிறார்கள். அதேபோல், மணியின் ஆட்கள் ஜெகாவை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில்தான் போலீஸ் மணியை தேடி வந்தது.

இந்த நிலையில் கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் வைத்து போலீஸ் அவனை கைது செய்தது. அவனிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள், போதை பொருள், அருவாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

English summary
Rowdy CT Mani arrested by a special unit of Chennai Police in Kanchipuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X