ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் குமரி வருகை எதிரொலி - பலத்த பாதுகாப்பு
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் நாளை மறுநாள் நாகர்கோவில் வருகிறார். இதனால் நாகர்கோவிலில் பாதுகாப்பினை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். குமரி மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். இரவு விவேகானந்தா கேந்திராவில் ஓய்வெடுக்கிறார்.

4 ஆம் தேதி காலை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகளுடன் கேந்திர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 5 ஆம் தேதி காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிர்மால்ய தரிசனத்தில் பல்வேறு தரிசனம் செய்கிறார். 6 ஆம் தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கசாமி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மோகன் பகவத் விவேகானந்தா கேந்திராவில் தங்கும் இடம் மற்றும் செல்லும் பாதைகளை ஆய்வு செய்கிறார்.
உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜ், கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய ஜோஸ் ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவில் எல்லைகள் முழுவதும் வாகன தணிக்கை நடந்து வருகிறது.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications