தமிழக பாஜகவில் திறமையானவர்களை கண்டுகொள்வதில்லை.. எரிச்சலில் எஸ்.வி.சேகர்
சென்னை: தமிழக பாஜகவில் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்வதில்லை என்று, தமிழக பாஜக பிரச்சார குழு செயலாளர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவிக்க, டெல்லி சென்ற எஸ்.வி.சேகர் அவருடன் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பியுள்ளார்.

அமித் ஷா தமிழகம் வருகை
இதுகுறித்து அவர் கூறுகையில் "அமித் ஷாவுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு அமித்ஷா, வர வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் அறிந்துகொண்டேன். இங்கு வந்து தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து அமித்ஷா ஆய்வு செய்வார்.

தலைவராக்குறேன்னு சொன்னாங்களே..
நான் பாஜகவில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இணைந்தேன். தமிழக பிரச்சார குழு தலைவராக பதவி அளிக்கப்படும் என்று எனக்கு அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வெகுநாட்களாக அதுபோன்ற எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், என்னை பிரச்சார குழு தலைவராக நியமிக்கும் கடிதத்தை மட்டும் அளித்தார்.

வேண்டியவர்களுக்கு பதவி
ஆயினும், பாஜகவின் எந்த ஒரு கூட்டத்துக்கும் எனக்கு தகவல் வருவதில்லை. மோடி பிரச்சாரத்துக்கு வந்தபோதுகூட எனக்கு தகவல் அளிக்கப்படவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றுதான் தமிழகத்து பாஜக தலைவர்கள் யோசிக்கிறார்கள்.

திறமைக்கு வாய்ப்பு தாங்க..
யார் கட்சியை தேசிய அளவுக்கு வளர்த்தெடுப்பார், யார் தேசிய பிரச்சினை மட்டுமின்றி, மாநில பிரச்சினைகளையும் சரியாக கையாளுவார் என்று யோசித்து அவர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் வட இந்திய கட்சி என்ற மாயையை மாற்றி பாஜகவை தென்னிந்தியாவிலும் வளர்க்க முடியும். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அரசியல் பிரவேசம்
எஸ்.வி.சேகர் இதுவரை பல கட்சிகளை பார்த்தவர். அதிமுகவில் அரசியல் பிரவேசம் செய்த சேகர், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல், கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு, அதிமுகவிலிருந்து சேகர் நீக்கப்பட்டார்.

கட்சி மாறுவது கடலைமிட்டாய் சாப்பிடுவது மாதிரி
இதைத்தொடர்ந்து 2010ல் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து திடீரென திமுகவுக்கு செல்லும் தோற்றத்தை சேகர் ஏற்படுத்தியிருந்தார். இதன்பிறகு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் ஐக்கியமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications