ஆர்.கே. நகர் இடைதேர்தலுக்கு 2-ஆவது முறையாக "ஊ.... ஊ"... சங்கு ஊதினார் எஸ்.வி.சேகர்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்படும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரினால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து ஆர்.கே.நகருக்கு மீண்டும் வரும் 21-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்தார்.
இந்நிலையில் அந்தத் தேர்தல் அதிகாரியை மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து வேலுச்சாமிக்கு பதிலாக தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். “பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது.” 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு🎉🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/EdE7CmADtW
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 9, 2017
இந்த பிரவீன் நாயர்தான் கடந்த முறையும் தேர்தல் அதிகாரியாக இருந்தார் என்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது 2-ஆவது முறையாக ஆர். கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் , விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications