நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு... சகாயம் அறிவிப்பு
நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
சென்னை: அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனவேதனை
இதுகுறித்து சகாயம் ஐஏஎஸ் கூறுகையில், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். 2 நாட்களாக எனக்கு ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்லமுடியாதவை.

துப்பாக்கிச் சூடு
எண்ணி பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தின் இளம் பிள்ளைகள் 17 வயது, 22 வயது என இந்த தமிழ் சமூகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டிய பிள்ளைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
வருத்தம்
அடிப்படையில் நான் ஒரு சுதந்திர நாட்டினுடைய குடிமகன். என் நாட்டினுடைய சக குடிமக்களுடைய துயரத்திலும் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களுடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

தார்மீக ஆதரவு
என்னை பொருத்தவரைக்கும் என் தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சகாயம் ஐஏஎஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications