நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு... சகாயம் அறிவிப்பு
நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
சென்னை: அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்று சகாயம் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனவேதனை
இதுகுறித்து சகாயம் ஐஏஎஸ் கூறுகையில், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். 2 நாட்களாக எனக்கு ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்லமுடியாதவை.

துப்பாக்கிச் சூடு
எண்ணி பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தின் இளம் பிள்ளைகள் 17 வயது, 22 வயது என இந்த தமிழ் சமூகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டிய பிள்ளைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
வருத்தம்
அடிப்படையில் நான் ஒரு சுதந்திர நாட்டினுடைய குடிமகன். என் நாட்டினுடைய சக குடிமக்களுடைய துயரத்திலும் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களுடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

தார்மீக ஆதரவு
என்னை பொருத்தவரைக்கும் என் தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் எனது தார்மீக ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சகாயம் ஐஏஎஸ்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications