8 வழி சாலை பற்றி கருத்து கேட்பு கூட்டம்.. தருமபுரியில் எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

சேலம் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க சென்ற அந்த தொகுதி எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க சென்ற அந்த தொகுதி எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு நிலங்களை எப்படியாவது வாங்க முயற்சி எடுத்து வருகிறது.

 Salem- Chennai 8 way Project: Police detained MP Anbumani from Dhramapuri

இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தருமபுரியில் இந்த சாலைக்காக 90 சதவிகித நிலங்களை வாங்கிவிட்டதாக தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

இந்த நிலையில் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க அந்த தொகுதி எம்.பி அன்புமணி முடிவெடுத்தார். இதுகுறித்து கருத்து கேட்க அவர் இன்று தொகுதிக்கு செல்ல முடிவெடுத்து இருந்தார்.

ஆனால் அவர் தொகுதிக்கு வருவதற்கு முன்பே அங்கு பல போலீசார் குவிக்கப்பட்டார்கள். அதேபோல் அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்தநிலையில் அங்கு சென்ற எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

தருமபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் அவரிடம் கூறியுள்ளது. மேலும் பாப்பிரெட்டிபட்டியில் நாளை கருத்து கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் இந்த கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+