சமயபுரம் கோயிலில் விபரீதம்.. மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி.. பக்தர்கள் ஓட்டம்.. கோவில் மூடல்
கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழந்தார்.
Recommended Video

திருச்சி: சமயபுரம் கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். யானையின் ஆவேசத்தினால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று வெள்ளிகிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த கோயில் யானை மசினிக்கு திடீரென்று மதம் பிடித்தது.

இதனால் அங்கும் இங்கும் மூர்க்கமாக நடக்க தொடங்கியது. இதனால் பக்தர்கள் அலறியடித்தவாறே அங்கும் இங்கும் சிதறி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். அப்போது ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். மசினி யானை விரட்டியதில் 8 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மதம் பிடித்த யானை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களின் குழந்தைகளையும் தூக்கி வீசியதாக தெரிகிறது. யானையை கட்டுப்படுத்த பாகன் கஜேந்திரன் கடுமையாக போராடினார். ஆனால் யானை மசினி கஜேந்திரனை மிதித்தது. இதில் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பாகனும் இறந்துவிட்டதால் யானையை அடக்க யாராலும் முடியவில்லை. மசினி யானை தொடர்ந்து பக்தர்களை விரட்டி தாக்கி வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. எனவே யானையை அடக்கும் பயிற்சி பெற்றவர்கள் சமயபுரம் விரைந்துள்ளனர். இதனிடையே பாகன் கஜேந்திரன் உயிரிழந்ததை அடுத்து சமயபுரம் கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது.
இந்த கோயிலுக்கு சற்று முன்னர்தான் அமைச்சர் துரைக்கண்ணு வந்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே யானைக்கு மதம் பிடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications