Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்டையில் மூழ்கடித்து மகனையும், மகளையும் கொன்ற தாய்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குட்டையில் தனது மகளையும், மகனையும் மூழ்கடித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டி மலையாகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி மணிமேகலை (28). இந்தத் தம்பதிக்கு ஹர்னீஸ் என்ற 6 வயது மகனும், சுசீதா என்ற 3 வயது மகளும் இருந்தனர்.

Sangagiri: Woman arrested for killing children

2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலைக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளை சக்திவேலுவின் பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலை தனது 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சக்திவேல் கூறுகையில், "கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், மணிமேகலைக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மணிமேகலை எங்களது 2 குழந்தைகளையும் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். இதனால் அவருடன் நான் பேசாமல் இருந்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று எனது 2 குழந்தைகளையும் குட்டையில் மூழ்கடித்து கொன்று விட்டார்" என்று கூறினாராம்.

அதனைத் தொடர்ந்து போலீஸார் மணிமேகலையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+