குட்டையில் மூழ்கடித்து மகனையும், மகளையும் கொன்ற தாய்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குட்டையில் தனது மகளையும், மகனையும் மூழ்கடித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டி மலையாகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி மணிமேகலை (28). இந்தத் தம்பதிக்கு ஹர்னீஸ் என்ற 6 வயது மகனும், சுசீதா என்ற 3 வயது மகளும் இருந்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலைக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளை சக்திவேலுவின் பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலை தனது 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சக்திவேல் கூறுகையில், "கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், மணிமேகலைக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மணிமேகலை எங்களது 2 குழந்தைகளையும் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். இதனால் அவருடன் நான் பேசாமல் இருந்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று எனது 2 குழந்தைகளையும் குட்டையில் மூழ்கடித்து கொன்று விட்டார்" என்று கூறினாராம்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் மணிமேகலையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications