குட்டையில் மூழ்கடித்து மகனையும், மகளையும் கொன்ற தாய்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குட்டையில் தனது மகளையும், மகனையும் மூழ்கடித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டி மலையாகாடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி மணிமேகலை (28). இந்தத் தம்பதிக்கு ஹர்னீஸ் என்ற 6 வயது மகனும், சுசீதா என்ற 3 வயது மகளும் இருந்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலைக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகளை சக்திவேலுவின் பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலை தனது 2 குழந்தைகளையும் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சக்திவேல் கூறுகையில், "கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், மணிமேகலைக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சேலத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மணிமேகலை எங்களது 2 குழந்தைகளையும் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். இதனால் அவருடன் நான் பேசாமல் இருந்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று எனது 2 குழந்தைகளையும் குட்டையில் மூழ்கடித்து கொன்று விட்டார்" என்று கூறினாராம்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் மணிமேகலையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications