ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன் காந்தியவாதி சசி பெருமாள் உடல் நல்லடக்கம்
சேலம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உண்ணாமலைப்பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி, கடந்த 31ம் தேதி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை வாங்கப்போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்தனர்.
இதையடுத்து, ஒருவார காலமாக சசிபெருமாள் உடல் மருத்துவமனையில் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று உண்ணாவிரதத்தில் இருந்த சசிபெருமாளின் மூத்த மகன் விவேக்கிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர், உடலை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இன்று காலை சசிபெருமாள் உடல் கொண்டு வரப்பட்டு, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள இ.மேட்டுக்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மாலையில், சசிபெருமாளின் உடல் அவரது வீட்டின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications