ஓபிஎஸ் பேட்டியால் பீதி... அமைச்சர்களுடன் போயஸ் கார்டனில் சசிகலா அவசர ஆலோசனை
அமைச்சர்களுடன் போயஸ் கார்டனில் சசிககலா அவசர ஆலோசனை நடத்த வருகிறார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பகேற்றுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பகீரங்க குற்றச்சாட்டால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சசிசலா அதிமுக அமைச்சர்களுடள் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பகீரங்கமாக தெரிவித்தார். இதனால் முதல்வராக பதவியேற்களாம் என்ற எண்ணத்தில் இருந்த சசிகலாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் அதிமுக எம்எல்ஏக்களுடன் போயஸ் கார்டனில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜய பாஸ்கர், காமராஜ், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications