சசிகலாவை இனி அக்கான்னு கூப்பிட மாட்டேன்.. திவாகரன் கடும் கோபம்
சசிகலா இனி என் சகோதரி அல்ல என திவாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மன்னார்குடி சசிகலா இனி என் சகோதரி அல்ல என திவாகரன் தெரிவித்துள்ளர். சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தினகரன் - திவாகரன் இடையிலான மோதல் பூதாகரமாகியுள்ளது. இருவரும் மாறி மாறி மீடியாக்களிடம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதைத்தொடர்ந்து திவாகரன் மன்னார்குடியில் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் அண்மையில் திறந்தார். அதோடு மாவட்ட நிர்வாகிகளையும் அறிவித்தார்.

தினகரனுக்கு சசிகலா நோட்டிஸ்
இந்த விவகாரம் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார் சசிகலா.

திவாகரன் பதிலடி
இரண்டு நாட்கள் கடந்தும் இதுகுறித்து வாய்திறக்காமல் இருந்த திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சசிகலா இனி என் சகோதரி இல்லை.

சசிகலா இனி என் சகோதரி அல்ல
சசிகலாவை இனி அக்கா என அழைக்கமாட்டேன். சசிகலா என் முன்னாள் சகோதரி. சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல்.

சசிகலாவை பழிவாங்குகிறார்
சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது. என் மூலமாக சசிகலாவை தினகரன் பழிவாங்க நினைக்கிறார்.

மனநோயாளிக்கு ஏன் நோட்டீஸ்
எனக்கு மனநிலை சரியில்லை என்று தினகரன் சொல்வது கையாலாகதத்தனம். என்னை மனநோயாளி என கூறும் தினகரன் எனக்கு நோட்டிஸ் அளித்ததே தவறு. எனக்கு மனநலம் சரியில்லை என தினகரன் என் மீதுள்ள ஆதங்கத்தில் கூறி வருகிறார்.

ஓபிஎஸ்- சசிகலா மோதல்
ஓபிஎஸ் - சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன்தான். யாரும் பிறக்கும்போதே பதவியுடன் பிறப்பதில்லை.

குடும்பத்திலிருந்து நீக்கியதற்கு நன்றி
என்னை குடும்பத்திலிருந்து நீக்கியதற்கு நன்றி. என்னை இனி மாஃபியா குடும்பம் என அழைக்க மாட்டார்கள். தினகரன் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர் போல் செயல்படுகிறார். ஜெயலலிதாவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிவன் நான். இவ்வாறு திவாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

சசிகலா குடும்பத்தில் மோதல்
சசிகலா இனி தனக்கு அக்கா இல்லை என கூறியிருப்பதால் மன்னார்குடி குடும்பத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications