அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.. சசிகலா ஆவேசம்!
அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை: நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனமெல்லாம் கட்சி மீதே இருக்கும். அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை சிறை வைத்துள்ள சசிகலா நேற்றிரவு முதல் தானும் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சசிகலாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடையை சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அதிமுகவின் புதிய சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று இரவு கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய சசிகலா, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்த பின்னரும் ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்சனை தான். அதை என்னால் சமாளிக்க முடியும். என்னைத்தான் சிறையில் அடைக்க முடியும், உங்கள் மேல் கொண்ட பாசத்தையோ, கட்சியின் மீதான அக்கறையையோ சிறையிலடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மனமெல்லாம் கட்சி மீதே இருக்கும். கட்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் தி.மு.க., என்ற ஒரு கட்சி இருக்க கூடாது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications