மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றம் - ரசிகர்கள் சோகம்
மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர்.
சென்னை: மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டு மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு தமிழக அரசு போதிய அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டது. சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணி முடிவடையாத காரணத்தால் இதுநாள் வரை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்படவில்லை.
சிவாஜி மணிமண்டபம் கட்டப்படுவதால் அங்கு சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு கூறியதை ஏற்று நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிவாஜி சிலையைஅகற்றும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரங்கள் மூலம் சிலையை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி மணிமண்டபம் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த பணியால் மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடற்கரை சலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவாஜி சிலையை நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சிவாஜி சிலை அகற்றப்பட்டதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications