அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சாத்தூர்: தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சாத்தூர் அருகே உள்ள கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித் திருவிழா நடைபெற்றது. இதற்கு நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி. சித்தன் விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது, ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுடன், ரூ. 10 ஆயிரமும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு விருதுடன் ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 32 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் கேள்விகள் கொண்ட பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications