For Quick Alerts
For Daily Alerts
Just In
5 மீனவர் தூக்கு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு: மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி
சென்னை: 5 தமிழக மீனவர் தூக்கு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசைப் பொறுத்தவரை தெளிவான வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கிறது. மீனவர் பிரச்சனையில் விரைவில் ஒரு நல்ல முடிவு வரும்.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வென்றுள்ளது. நான் மகாராஷ்டிரா பாஜக பொறுப்பாளராக இருந்தேன். அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
அடுத்ததாக தமிழகம், ஆந்திரா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். தமிழக பிரச்சனைகளை தேசிய அளவில் நிச்சயம் கொண்டு செல்வேன்
.
இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.
Comments
English summary
Union Minister Rajiv Pratap Rudy today said "some good outcome" would soon emerge on the issue of five fishermen facing death sentence in Sri Lanka, in which India has filed an appeal.