கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் நாளை முதல் போராட்டம்..
கோவை: கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்குவதாக விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு சங்க தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
விசைத்தறி தொழிலில் மின் கட்டணம், உதிரி பாகங்கள், டீசல், போக்குவரத்து செலவினங்கள் உயர்ந்து விட்டதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் தொழில் சென்று கொண்டுள்ள நிலையில் கூடுதலாக கூலி உயர்வு கேட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஏழு முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க கூட்டுக்கமிட்டி எடுத்த முடிவுப்படி நாளை முதல் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்.
அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து சங்க உறுப்பினர்களும் தங்களது தறிகளை நிறுத்தி போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் தறிகளை நிறுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். இதேபோல் தெக்கலூர் மற்றும் புதுப்பாளையம் வட்டாரத்திலும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications