வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம்.. சொல்வது தமிழிசை சவுந்தரராஜன்
வாழ்வாதாரத்துக்காகக் கடலில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழக மீனவர்கள் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், " தமிழக மீனவர்களை அதிகமாக பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்." என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்காலத்தில், பெட்ரோல் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பொதுமக்கள் அதிக வரி செலுத்தி பெட்ரோல் டீசல் வாங்குவது தடுக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார்.
"தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக எல்லை தாண்டுகிறார்கள். அதற்காக கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை இலங்கை வாபஸ் பெறவேண்டும்" என்றும் தமிழிசை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி இலங்கை அரசு, ' எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதாவை ' அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாலோ, தடை செய்யப்பட்ட இருமடி வலைகளை கொண்டு மீன்பிடித்தாலோ ரூ.2 முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே திமுக செயல் தலைவர், தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் கருப்பு சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்











Click it and Unblock the Notifications