அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு முரசொலி பவளவிழா அழைப்பிதழ் கொடுத்த ஸ்டாலின்..!
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் முரசொலி பவளவிழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் முரசொலி பவளவிழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதிமுக தோழைமை கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் ஸ்டாலினுடன் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்நிலையில் ஆளுங்கட்சியின் தோழமை கட்சி எம்எல்ஏக்களை முரசொலி பவள விழாவில் பங்கேற்குமாறு னியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களுக்கு கோடிக் கணக்கில் பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்குப் பிறகு 3 எம்எல்ஏக்களும் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications