மணலே இப்படி கெட்டுப் போயிருக்கே.. அப்ப மக்களோட நிலை? ஸ்டெர்லைட் களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்!
ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மணலே கறுப்பு நிறமாகியுள்ளதால் மக்களின் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மணலே கறுப்பு நிறமாகியுள்ளதால் மக்களின் என்னவாகியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் சுவாசக்கோளாறு, ரத்தசோகை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆதரவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கறுப்பாக மாறிய மணல்
மக்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மணல் கறுப்பு நிறத்தில் மாறியுள்ளது.

தன்மை எப்படி இருக்கும்?
இதற்கு காரணம் ஆலையில் இருந்து வெளியாகும் கருமையான நச்சுபுகையே என கூறப்படுகிறது. மண்ணின் நிறத்தை பார்க்கும் போதே அதன் தன்மை எப்படி இருக்கும் என தெரிகிறது.

எம்மாதியான விளைவு
மண்ணின் நிறத்தையே மாற்றும் இந்த கரும்புகை அதனை சுவாசிக்கும் மனிதர்களுக்குள் எம்மாதியான விளைவை ஏற்படுத்தும் என்ற பீதி எழுகிறது. ஸ்டெர்லைட் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதும், கருத்தரித்த பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா அரசு?
அதையும் தாண்டி தவமிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றெடுக்கும் பிள்ளைகள் பல குறைபாடுகளுடனும் பல்வேறு நோய்களுடனும் பிறப்பது அவலத்தின் உச்சம். மக்களின் போராட்டத்தையும் அதன் அவசியத்தையும் புரிந்து இனியாவது நடவடிக்கை எடுக்குமா அரசு?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications