அதிர்ந்த திருப்பத்தூர்.. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை! பெற்றோர்கள் பீதி.. வனத்துறையினர் விரைந்தனர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்
வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த பள்ளி உள்ளது. அருகிலேயே ரயில் நிலையமும் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த பகுதி காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் தான் இந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பள்ளியில் உள்ள மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் இந்த சிறுத்தை எப்படி நுழைந்தது? என வனத்துறையினருக்கும் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையை பிடிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளார். பள்ளிக்குள் சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வெளியான செய்தியை அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி அமைந்து இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேயும் வனப்பகுதி இல்லை. சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் வனப்பகுதி உள்ளதால் இவ்வளவு தொலைவு கடந்து சிறுத்தை எப்படி வந்தது என்பது வனத்துறையினருக்கே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
வனத்துறையினரும் காவல்தூறையினரும் இணைந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் சிறுத்தையை பார்க்கும் ஆவலுடன் அங்கே திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications