சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட மாணவர்கள் அமைப்பினர் முற்பட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் கடந்த 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications