சிறந்த நிர்வாகதன்மை கொண்டவர் ஜெயலலிதா: நாடாளுமன்றத்தில் சுமித்ரா மகாஜன் புகழாரம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவு நாட்டிற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன் புகழஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 11.30 மணிக்கு ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜெயலலிதாவின் மறைவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, ஜெயலலிதா சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் என்று சபா நாயகர் சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல; நாட்டிற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்றும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவு அரசியலில் ஒரு பின்னடைவு என்றும் சுமித்ரா மகாஜன் நாடாளுமன்றத்தில் புகாழரம் சூட்டினார். பின்னர், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications