Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரீனாவில் கருணாநிதி இறுதிச் சடங்கு.. தடை கோரி டிராபிக் ராமசாமி மனு.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி இறுதிச் சடங்கு...தடை கோரி டிராபிக் ராமசாமி மனு..வீடியோ

    சென்னை: கருணநிதியின் இறுதி சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என நிலுவையிலுள்ள வழக்குகளை காரணம் காண்பித்து, தமிழக அரசு அறிவித்த நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்குள் வருகிறது என்பதால் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாதகவும், கருணாநிதி சமாதி, அண்ணா சமாதி அருகே அமைவதில் பிரச்சினை இல்லை எனவும் 5 வழக்குகளை மனுதாரர்களே முன்வந்து வாபஸ் பெற்றனர்.

     Supreme court rejected Traffic Ramaswamy appeal against Karunanidhi memorial

    ஆனால் ஒரு மனுதாரரான டிராபிக் ராமசாமி தரப்போ, ஆட்சேபனை இல்லை என்றும் இருக்கிறது என்றும் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தது. ஒருவழியாக, வழக்கை வாபஸ் பெற மாட்டோம் என்றும், கருணாநிதி சமாதிக்கு ஆட்சேபனை இல்லை என்றும் டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது. இதையடுத்து, மெரினாவில் அண்ணா சமாதி அருகே, கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.

    இதனிடையே டிராபிக் ராமசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி, கருணாநிதி சமாதியை, மெரினாவில் அமைக்க தடை விதிக்க கோரியது. நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,
    முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி நினைவிடம், மெரினாவில் அமைவதை தடுப்பதில் சிக்கல் இல்லை.

    முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி இறுதிச் சடங்குகள் மெரினாவில் நடப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+