பிரேத பரிசோதனையின்போது தனியார் டாக்டர்.. ராம்குமார் தந்தை மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று, ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தனியார் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்று தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதி கிருபாகரனிடம் வழக்கு சென்றது. அதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த தந்தை பரமசிவம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இப்படிப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றால் மற்ற வழக்குகளிலும் இதேபோன்ற நிலை ஏற்படலாம் என்றும் கூறியது. மேலும் இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியது. இதனையடுத்து தந்தை பரமசிவம் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இனி சென்னை ஹைகோர்ட் உத்தரவு படிதான் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெறும். மேலும், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் இருக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, யார் நியமிக்கப்பட உள்ளார்கள் என்ற விவரம் இனிதான் தெரிய வரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications