கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 வது நபர் பலி: தமிழகத்தில் பலி 13 ஆக உயர்வு
கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 41 வயது நபர் ஒருவர் இன்று பலியானதை அடுத்து, அம்மாவட்டத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அருகே தாராபுரத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கடந்த வாரம் புனே சென்றுவிட்டு ஊர் திரும்பினார். அதுமுதல் அவருக்கு காய்ச்சல் அதிகரித்தது.
மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
கடந்த ஞாயிறன்று 39 வயது பெண்ணும், நேற்று 60 வயது மூதாட்டியும் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த நிலையில், இன்று 3வது நபர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் 277
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 பேர் தலைநகர் ஜெய்ப்பூரில் பலியாகியுள்ளனர்.

குடும்பத்தோடு பாதிப்பு
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் லிங்கோஜி (49). மும்பையில் ஒரு நிறுவனத்தில் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த இவருக்கு காய்ச்சல் விடாமல் நீடித்ததால் மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

என்ஜீனியர் தற்கொலை
அப்போது, அவரது மனைவி, 2 மகள்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த பிரகாஷ் மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.

நாடுமுழுவதும் பலி அதிகரிப்பு
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு மார்ச் 1ஆம் தேதிவரை 1115 பேர் பலியாகி இருப்பதாகவும், 21 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த நிலையில் மேலும் பலர் அடுத்தடுத்து உயிரிழப்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications