இது தமிழ்நாடா.. பாகிஸ்தானா.. பங்களாதேஷா?- ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்தர் ஆவேசம்
சென்னை: இந்தியாவின் கடைகோடி தனுஷ்கோடி, போகிற போக்கைப் பார்த்தால், தமிழ்நாட்டை ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது தெருக்கோடி. மத்திய அரசே கண்டும் காணாமல் நடிக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, என்று ஆவேசமாகப் பேசினார் டி ராஜேந்தர்.
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி நதிநீர் பங்கீடு மற்றும் மீனவர் பிரச்சனையில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
டி.ராஜேந்தர் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பிரச்சனைகளில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.

அண்டை மாநிலங்களின் அடாவடி
போராட்டத்தின் போது டி.ராஜேந்தர் பேசுகையில், "பாலாற்றுக்கு குறுக்கே அணைக்கட்டுவோம் என்று, ஆந்திரா செய்கிறது தமிழகத்திடம் அடாவடி. சிறுவாணி நதியை தடுத்து, அணை கட்டுவோம் என்று கேரளா கொடுக்கிறது தமிழ்நாட்டுக்கு கெடுபிடி. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம், காவிரியில் தண்ணீரை திறந்து விடமாட்டோம் என்று கர்நாடகா தமிழ்நாட்டுக்கு கொடுக்கிறது கசையடி.

முதல்வர் இரும்புப் பிடி
இப்படி அண்டை மாநிலங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று ஆளுக்கு ஒரு பக்கம் தமிழ்நாட்டுக்கு போடுகிறார்கள் கிடுக்குபிடி. ஆனால் தமிழ்நாட்டு உரிமையை விட்டு தர மாட்டோம் என்று தமிழக முதல்வர் உறுதியாக பிடிக்கிறார் உடும்புபிடி. அது அசைக்க முடியாத இரும்பு பிடி.

இது தமிழ்நாடா.. பாகிஸ்தானா.. பங்களாதேஷா?
மாநில அரசுகளுக்கு நடுவே மத்தியஸ்தம் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் மீது ஏன் இந்த வெறுப்பு? தமிழ்நாடு என்ன பக்கத்து நாடு பாகிஸ்தானா? இல்ல பங்களாதேஷா? எங்களுக்கு ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? தட்டி கேட்காமல் மத்திய அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்?

என்ன மரியாதை இருக்கு?
காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அதற்குரிய மரியாதை இருக்கிறதா, இல்லையா என்று நடத்த வேண்டும் போலிருக்கிறது பட்டிமன்றம். கர்நாடகா, காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை அலட்சியபடுத்துகிறது. இன்னும் சொல்ல போனால் உச்சநீதி மன்ற தீர்ப்பையே உதாசினப்படுத்துகிறது.

இருக்கிறதா ஒருமைப்பாடு?
எங்கே போகிறது இந்திய நாடு? பாவம் தண்ணீர் பிரச்சனையில் தமிழ்நாடு படுகிற பெரும்பாடு. பாரத தேசத்தில் இருக்கிறதா, இல்லையா தேசிய ஒருமைப்பாடு? சிறுவாணி நதியின் குறுக்கே அணை கட்ட ஆய்வு செய்வதற்கு தமிழ்நாட்டிடம் ஒப்புதலை பெறாமலே, கேரளா அரசுக்கு மத்திய அரசு கொடுக்கலாமா அனுமதி? அப்படியென்றால் கேரளாவை மதிப்பீர்கள், தமிழ்நாட்டை போட்டு மிதிப்பீர்களா?

தெருக்கோடியில் தமிழ்நாடு
இந்தியாவின் கடைகோடி தனுஷ்கோடி, போகிற போக்கைப் பார்த்தால், தமிழ்நாட்டை ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது தெருக்கோடி. மத்திய அரசே கண்டும் காணாமல் நடிக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே.
எங்கள் தமிழக மீனவர்களோ கடலின் மீனைப் பிடிக்கிறார்கள். இலங்கை கடற்படையோ மீனவர்களை பிடிக்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் இந்திய அரசோ, மவுனத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
அதனால்தான் மத்திய அரசுக்கு எதிராக, எங்கள் லட்சிய தி.மு.க.வினர் கொடி பிடிக்கிறார்கள். மத்திய அரசே தொடர்ந்து காட்டாதே மெத்தனம்," என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications