புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா- முதல்வர் ஈபிஎஸ் டெல்லி பயணம்... விவசாயிகளை சந்திப்பாரா?
நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார் ராம்நாத் கோவிந்த். இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி: குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர் தமிழக விவசாயிகளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், நாளை நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பதவியேற்பு விழாவில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். காலையிலேயே ஓபிஎஸ் தனது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லி சென்றுள்ளார்.
பிரதமரையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில் டெல்லி செல்லும் ஈபிஎஸ் பிரதமரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓபிஎஸ் உடன் அணிகள் இணைப்பு குறித்து பேசுவாரா? அல்லது போன சுவடு தெரியாமல் திரும்பி விடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த முறை போராடிய போது முதல்வர் நேரில் சந்தித்து சில வாக்குறிகளை அளித்தார். அவை நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இம்முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுவாரா என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications