தற்போதைய தமிழக அரசியல் சூழல் டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: துஷ்யந்த் தவே
தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.
சென்னை: தற்போதைய தமிழக அரசியல் சூழல் டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள் என்றும் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
தமிழக அரசியல் சூழல் டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள் என்றும் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
Recommended Video
பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை நீக்காமல் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது பாரபட்சமாகும். 18 எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது யார் என்பது அனைவரைக்கு தெரியம் என்று துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை தமிழகத்தில் நடந்துள்ளது. மத்தியில் இருப்பவர்கள் சபாநாயகரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதிநீக்கம் செய்ய முடியும் எனவும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டர்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையிலான தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி வந்தார். இப்போது உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் மத்திய அரசு மீது குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.