பெரியார் சிலை விவகாரம்: எச். ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்!
Recommended Video

சென்னை: தலைவர்கள் மற்றும் சிலைகளை அவமரியாதை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச். ராஜா முகநூலில் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போராட்டம், கொடும்பாவி எரிப்பு சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து எச். ராஜா நீக்கினார். தனக்கு தெரியாமல் தன்னுடைய அட்மின் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுவிட்டதாக ராஜா இன்று காலையில் புதிய விளக்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ராஜாவை கைவிட்ட பாஜக
பெரியார் சிலை குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்து என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று கூறி இருந்தார். எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழிசை கூறி இருந்தார்.

பாஜக நிலைப்பாடு என்ன?
எச். ராஜாவின் கருத்துக்கு கண்டனமும் தெரிவிக்காமல், ஆதரவும் தெரிவிக்காமல் இரண்டும் கெட்டானாக அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை கூறியதும் விமர்சனத்திற்கு உள்ளானது. எச்.ராஜாவின் கருத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்ற கருத்தும் நிலவியது.
|
ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்
இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருத்தை பதிவிட்டுள்ளார் தமிழிசை. அனைத்து தலைவர்கள் பங்களிப்பையும் மதிக்க வேண்டும், அனைவருக்கும் மரியாதை கொடுப்பதே தமிழர்கள் பண்பாடு.

அனைவரையும் மதிக்க வேண்டும்
தமிழ்நாடு, தமிழக மக்கள் அனைவரையும் மதிக்கக் கூடியவர்கள். தலைவர்கள் மற்றும் சிலைகளை அவமரியாதை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து தலைவர்களையும் நாம் மதிக்க வேண்டும் என்று தமிழிசை காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications