கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன்
நடிகர் கமல்ஹாசனுக்கு திடீர் ஞானோதயம் வருவது ஏன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுள்ளார்.
கோவை: அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கமலின் அரசியல் டுவிட்டுகளை கடுமையாக விமர்சித்தார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன சேவை செய்தார்கள்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்?
திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூக கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது ஏன்? என்று தெரியவில்லை.
ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அப்போதெல்லாம் கமல்ஹாசன் எவ்வளவு குரல் கொடுத்தார்? அவர் இப்போது திடீரென்று அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?. சினிமா போல நினைத்துக் கொண்டு ஒருநாள் முதல்வர் ஆகலாம் என்ற கதை அல்ல. அரசியல் என்பது டுவிட்டர் தளத்தில் இல்லை. அது மக்களுடன் நிஜ தளத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட கூடியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோத அமைப்புகள் கலந்திருக்கின்றன. மாணவர் சமுதாயத்திற்குள் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் கலந்து விடக்கூடாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
ஹிந்தி படத்தில் நடிக்கலையா?
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று காலையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கமல் இந்தி படத்தில் நடித்தவர்தானே, அதை வைத்து ஆதாயம் ஈட்டியவர்தான். இந்தி எதிர்ப்பிற்காக குரல் கொடுத்தேன் என்று கூறுவது ஏன் என்று கேட்டர். கமல்ஹாசன் இப்போது புனிதமடைந்து விட்டதாக பேசக்கூடாது. யாராக இருந்தாலும் இணைய தளத்தில் பேசக்கூடாது களத்திற்கு வரட்டும், களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் தமிழிசை கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications