வன்முறைகளை தடுக்க தவறிய சித்தராமைய்யா உடனடியாக பதவி விலக வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்
சென்னை: தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி பிரச்சினையொட்டி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், லாரிகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்சிருப்பது உச்சகட்ட அராஜகம். இதுபோன்ற வன்முறைகளை கர்நாடக காவல் துறையினர் தடுக்க முயன்றதாகவே தெரியவில்லை. கர்நாடக அரசின் செயலற்ற தன்மையையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.
கர்நாடகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் கூறிய பிறகே ஓரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், பற்றி எரியும் இப்பிரச்சினை குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் எவ்வித கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை தடுக்கத் தவறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
தமிழர்களைத் தூண்டுவிடும் தேசவிரோத சக்திகளின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது. வன்முறைக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுத்து விடக் கூடாது'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications