தமிழகத்தில் 18 ஐபிஎஸ்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செந்தில்வேலன்,அபினாஷ்குமார், அஸ்ராகார்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில் ஆகியோர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். துரைக்குமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி ஆகியோரும் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சென்னை பெருநகர தலைமையக காவல் இணை ஆணையராக ஏ.ஜி.பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையராக மகேஷ்வரியும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்பி அந்தஸ்தில் இருந்த காமினி ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், கோவை சரக டிஐஜி கார்த்திகேயன், திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு கிழக்கு மண்டல டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலோர காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி நியமனம்.
சென்னை கிழக்கு இணை ஆணையர் சந்தோஷ்குமார் விழுப்புரத்துக்கு மாற்றம். வேலூர் சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன் மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றம். தமிழகத்தில் எஸ்பி அந்தஸ்தில் பணியாற்றும் 12 பேர் டிஐஜியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.












Click it and Unblock the Notifications