எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குப் பயப்படுகிறார்... திருநாவுக்கரசர் தாக்கு: வீடியோ
மத்திய அரசைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால்தான் அவர் மாட்டுறைச்சி தடைக்கு எந்த கருத்தையும் கூறாமல் உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ள
சென்னை: மத்திய அரசைப் பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி பயப்படுகிறார். அதனால்தான் மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் எந்தக் கருத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி போன்றோர் எதிர்த்து கருத்து கூறியுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து எதுவும் கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூட, மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ''புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட சில மாநில அரசுகள் இந்த தடையை எதிர்த்து கருத்துக் கூறியுள்ளனர். ஆனால், தமிழக அரசு வழக்கம்போல் மத்திய அரசுக்கு பயந்துகொண்டு எந்தக் கருத்தையும் கூறவில்லை. அது கண்டிக்கத்தக்கது. புதுவையைப் போல், மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க மாட்டோம் என தமிழக அரசு கூற வேண்டும்.
மேலும், மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் வாங்கவும் விதித்துள்ள தடையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. ஆர்.எஸ்.எஸ் இடும் கட்டளைகளை நிர்பந்தங்களின் காரணமாக மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. காரணம் மோடியும் ஒரு ஆர்.எஸ்.எஸ் சேவகர் தான்'' என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications