காவிரி மேலாண்மை வாரியம்.. சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி தீர்மானம்.. தமிழக அரசு திட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில், பிப்ரவரி 16ல், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், கர்நாடக அரசோ அதுபோல உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தது. இதுதொடர்பாக, சமீபத்தில், மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பதுதான் என தமிழக அரசு சில தினங்கள் முன்பு விளக்கம் கொடுத்தது. இந்த குழப்பங்களுக்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதிடாததுதான் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், வரும் 15ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், அன்று மாலையே மீண்டும் அவையை கூட்டி சிறப்பு கூட்டம் நடத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்றைய தினம் சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்தவில்லை எனில், 16ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications