தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலிலும் திமுக, காங். கூட்டணி தொடரும் - திருநாவுக்கரசர்
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நாளில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இந்த தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலின் போது திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போன்றே இந்தத் தேர்தலையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கும் என்று தெரிவித்தார்.
கடந்த முறை நடந்தது போன்று பணப்பட்டுவாடா இல்லாமல் நியாயமாக, நேர்மையாக சுதந்திரமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார். மேலும், கடந்த முறை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் இந்த முறை வெறும் 3 தொகுதிதான் என்பதால் இந்தத் தேர்தலை திறம்பட நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 16ம் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, அந்த 2ம் தொகுதிகளுக்கும் முதலில் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் பின்னர் எதிர்ப்பு வலுக்கவே தேர்தலையே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications