வேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!
சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை: சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதனின் 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
எஸ்ஆர்எம் கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காசிக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் மதன்.

ஐந்து மாதங்களுக்குப்பிறகு திருப்பூரில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்நிலையில் ரூ.91 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை வடபழனி, வளசரவாக்கம், கேரளாவில் உள்ள அவரது அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications