10 மணி நேரம் மின் வெட்டு- இருளில் தவிக்கும் நெல்லை மாவட்டம்
நெல்லை: தமிழகத்தில் மீண்டும் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் எங்கெங்கும் இருளாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லாததால் கடுமையாக மின் வெட்டு நிலவுகிறது. புதிய மின் திட்டங்கள் நிறைவு பெறாத நிலையில் தற்போது காற்றாலையும் காலை வாரிவிட்டது.

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதால் அங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை சுமாராகவே பெய்தது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக மின் நுகர்வு குறைந்த போதிலும் மின் தடை குறைந்தபாடில்லை.
கடந்த 10 நாட்களாக காற்றாலைகள் சரியாக இயங்கவில்லை. இவற்றின் மூலம் 4 மெகா வாட் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருவதால் அங்கும் மின் உற்பத்தி குறைந்த அளவே செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமுலில் உள்ளது.
வழக்கமாக கோடைகாலங்களில்தான் இது போன்ற நிலை ஏற்படும். நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இப்படி 10 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் திண்டாடி விட்டனர். அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications