இப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி!
தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க விவசாயி ஒருவர் வினோதமான செயலை செய்துள்ளார்.
மணப்பாறை: தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க தென்னை மரத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்புகளை கட்டி ஒரு விவசாயி தொங்கவிட்டுள்ளதால், கிராம மக்களே அச்சமடைந்து கிடக்கிறார்களாம்.
மணப்பாறை: மணப்பாறை அருகே தென்னை மரத்தில் இளநீர், தேங்காய் திருட்டை தடுப்பதற்காக மனித மண்டை ஓடுகளை கட்டி தொங்க விட்ட விவசாயியின் செயலைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ளது கொண்டையம்பட்டி கிராமம். இங்கு, விவசாயி ஒருவருக்கு சொந்தமான 6 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்புக்கு வேலி எதுவும் இன்றி திறந்தவெளியிலேயே உள்ளது.
இந்தநிலையில் தென்னந்தோப்பில் உள்ள ஒரு சில மரங்களில் தேங்காய் குலை தள்ளி காய்க்க தொடங்கியுள்ளதால், அடிக்கடி இளநீர் மற்றும் தேங்காய்கள் திருடப்பட்டு வருகின்றன. அடிக்கடி மரத்திலிருக்கும் இளநீர், தேங்காய்கள் காணாமல் போவதால் விவசாயி மிகவும் கவலை அடைந்தார்.
திருட்டை தடுக்க விவசாயி வினோத முடிவுக்கு வந்தார். இரவோடு இரவாக தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை கட்டி வைத்து அதில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவற்றை வைத்துச் சென்றார். இதுபோன்று அந்த தோப்பில் 5 இடங்களில் கட்டி வைத்துள்ளார்.
மறுநாள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விவசாயின் இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எலும்பு, எலும்பிச்சம் பழம் சரி, மண்டையோடு இவருக்கு எப்படி கிடைத்திருக்கும் என புரியாமல் விழிக்கிறார்கள். இதனை கண்ட சிலர் பயம் காரணமாக வராமலே உள்ளனராம். ஒருசிலர் விவசாயியின் வினோத காரியத்தை நேரில் வந்து பார்த்து செல்கின்றனராம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications