காந்தி குழும நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு.. 2வது நாளாக இன்றும் தொடரும் சோதனை
காந்தி பேப்ரிக்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்
Recommended Video

சென்னை: காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இன்றும் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்றும் ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான 23 இடங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு விவகாரம், காந்தி குழுமம் நிதி நிறுவன மோசடி ஆகிய காரணங்களால் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக பல முறை புகார் அளிக்கப்பட்டது.

வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான ஜவுளிகடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனையை தொடர்கிறார்கள்.
நேற்று நடந்த சோதனையில் ரூ7.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்னும் நிறைய பொருட்களை கைப்பற்ற வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு முழுக்க இந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications