இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவருக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த சரோனுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இந்திய கடல் எல்லைக்குள்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். சரோன் காயமடைந்தார்.

சம்பவம் நிகழ்ந்து 10 மணி நேரமாக வாய்திறக்காமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிரிட்ஜோவுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்த சரோனுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு காரணமாக இருந்த இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேறஅகொள்ள வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவருக்கு ரூ.1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications